Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

செப்டம்பர் 18, 2021 04:38

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியார் அவர்களின் 143 - வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில், தந்தை பெரியார் திடலில் உள்ள அலங்கரித்து வைக்கப்பட்ட  பெரியார் திருவுருவ சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்  நிகழ்ச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பத்மநாதன், தாராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில் குமார்,நகர செயலாளர் தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க சமூகநீதிக்கான உறுதிமொழியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வாசித்த போது அனைவரும் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சிகள் கலந்துகொண்டனர்.

 மேலும் இதில்மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சன் பாலு, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் கே.கே.துரைசாமி, நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டாக்டர். கே.வி. சிவசங்கர், தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் ஒண்டிவீரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்